Monday, August 13, 2012

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்?

ஆங்கில அரசு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதாக சட்டம் இயற்றியது. நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர். 
ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டது. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர். ஆங்கிலேயர்களுக்கு புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங்குகிறது. எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர். இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.  

 வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாஞ்சாலங்குறிச்சி ஊமைத் துரைதான் உலகிலேயே மிகவும் அபூர்வமான புரட்சிக்காரராகும். அவருக்கு காதும் கேளாது. வாயும் பேச வராது. தமது சமிக்ஞைகளினாலேயே மக்கள் மனதில் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய சக்தியை அவர் பெற்றிருந்தார். போலிகார் என்ற சிறு பிரிவின் தலைவராக விளங்கிய அவர் 1801-ம் ஆண்டில் வெள்ளையர்களை எதிர்த்து நடத்திய கிளர்ச்சி இன்றும் உலக வரலாற்று ஆசிரியர்களை வியக்க வைக்கிறது. தனது சமிக்ஞைகளினாலேயே மக்களை எழுச்சி கொள்ளச் செய்த முதல் வீரன் நம் ஊமைத்துரைதான்.  அடக்குபவர்கள் சுதந்திரத்தை  தாமாகவே முன்வந்து  தருவதில்லை;  ஒடுக்கப்பட்டவர்கள்  போராடிப் பெறுவதே  சுதந்திரம்.
Ref: Dinamani