Sunday, June 24, 2012

மாநிலங்களும் இந்திய ஒன்றியமும்!

ன்றைக்குஇந்தியாவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது தெலுங்கானாபோராட்டம். தனி மாநில கோரிக்கைக்கான இப்போராட்டம் ஆந்திர சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், மாணவர்களின் போராட்டங்கள், உயிர்தியாகங்கள் போன்றவற்றால் அம்மாநிலமே நிலை குலைந்து போயுள்ளது. கடலோரமாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பகுதிகளையும் உள்ளடங்கியதுஆந்திர மாநிலம். இதில் தெலுங்கானா ஒப்பிட்டு அளவில் பெரியது. வாரங்கல்,ஹைதராபாத், ரெங்காரெட்டி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகியமாவட்டங்கள் தெலுங்கானா என்று அழைக்கப்படுகிறது.


நாடு விடுதலை அடைந்தபோது ஹைதராபாத் நிஜாம் தனது சமஸ்தானத்தை இந்தியாவுடன்இணைக்க மறுத்தபோது அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின்இரும்பு கரத்தினால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கானாகம்யூனிஸ்ட் பேரெழுச்சியை தொடர்ந்தும் தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன்கட்டாயமாக இணைக்கப்பட்டது. காந்தியவாதியான பொட்டி ஸ்ரீராமுலு, தெலுங்குபேசும் மாநில கோரிக்கை காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாகஅன்று சென்னை ராஜஸ்தானத்திலிருந்து மொழிவழி மாநிலமாக 1953-இல்பிரிக்கப்பட்டது. அப்போது கர்னூல்தான் அதற்கு மாநிலம் என்ற அடிப்படையில்தெலுங்கு மொழி பேசும் மக்களை கொண்ட ஆந்திரப் பிரதேசமாக 1956-இல்ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தஹைதராபாத்தில் இருந்த நிலபிரபுக்கள் ஆந்திராவுடன் இணைபடுத்தி, தனிமாநிலமாக்க கோரினர். அதன் பின்னர், 1961 தேர்தலுக்கு பிறகு உருவானஅம்மாநில சட்டமன்ற பெரும்பான்மையும் ஆந்திரபிரதேசத்தில் இணைவதாகத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பிராந்தியத்துடன் இணைப்பது, இல்லையேல் தனிமாநிலம் அமைப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரைசெய்தது. அவ்வொப்பந்தங்களை மத்திய அரசு கைவிட்டது. இதனால் தெலுங்கானாமக்கள் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாகவெளியானது. பலகாலமாகவே அரசில், அரசியலில் தெலுங்கானா மக்களுக்கானமுக்கியத்துவம் குறைந்து வந்ததால் 1969-இல் தெலுங்கானா பகுதியினர்தெலுங்கானா மாநிலம் கோரி போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் கைதுசெய்யப்பட்டு கடும் அடக்குமுறைக்கு பிறகு அந்தப் போராட்டம் படிப் படியாககுறைந்து போனது. பிறகு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகரராவ் ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சியை 2001-இல் உருவாக்கினார்,தெலுங்கானா என்பதே அந்த கட்சி யின் மையமான கோரிக்கை ஆனது.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் முடிவெடுக்கும்என அறிவித்த தன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங் களும் இத்தகையகோரிக்கையை எழுப்பி வருகின்றன. தமிழ கத்தை வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு,கொங்கு நாடு என பிரிக்க வேண்டுமென கோரிக்கை எழ ஆரம் பித்தது. உத்திரபிரதேசமாநிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் மாயாவதி கோருகிறார். அதேபோல உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து போடோலாந்து,உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து பிண்டேல் கண்ட், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து குடகு மாநிலம், ஒரிசாவிலிருந்துமகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ் தானிலிருந்து பூர்வாஞ்சல்,குஜராத்திலிருந்து சௌ ராஷ்டிரா எனத் தேசிய அடிப்படை யிலும், சாதி அடிப்படையிலும் தனி மாநில கோரிக்கை கள் முன் வைக்கப்படுகின்றன.

மாநிலங்கள் உருவானவிதம்

சுதந்திரம் அடையும்போது இந்தியாவில் ஒன்பது பிரிட்டீஷ் மாகாணங்களும், 562சிறு மன்னராட்சி பகுதி களும் (Princity States) நிலவில்இருந்தன. சுதந்திரத்திற்கு பின் நடத்தப்பட்ட மாநில மறுசீரமைப்பின் முதல்கட்டத்தையடுத்து மாநிலங்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. அவை:

"A' Category:  உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அசாம்.ஒரிசா, மத்திய பிரதேசம், மெட்ராஸ் தற்போதைய தமிழ்நாடு +ஆந்திரம்), பம்பாய்(தற் போதைய மகாராஷ்டிரம்+குஜராத்). இவை ஆளுனரின் ஆட்சியின் கீழ்செயல்பட்டன.

"B' Category: PEPSU, , மத்திய இந்தியா, மைசூர் (தற்போதைய கர்நாடகம்),சௌராஷ்டிரம், ராஜஸ்தான், ஹைதராபாத், திருவிதாங்கூர், கொச்சி. இவை மாநிலத்தலைவரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன.

"C' Category:  அஜ்மீர், கட்ச், கூர்க், தில்லி, பிலாஸ்பூர், போபால்,திரிபுரா, இமாசலப் பிரதேசம், மணிப் பூர், விந்தியப் பிரதேசம் இவைலெப்டினட் கவர்னரால் ஆட்சி செய்யப்பட்டன.

"D' Category: : அந்தமான் நிகோபார் தீவுகள். மத்திய அரசின் நேரடி நிர்வாகம்.

மாநில மறுசீரமைப்பு கமிஷன்

* இரண்டாம் கட்ட மாநில சீரமைப்பு வட்டாரக் கூறுகள், மொழி, கலாச்சாரம்மற்றும் பொருளாதார நிலைகள் போன்றவற்றின் அடிப்படையில் நடைபெறுகிறது.

* மொழியடிப்படையில் மாநிலங்களை புனர் நிர்மாணம் செய்யவேண்டும் எனும்கோரிக்கை பற்றி ஆராய் வதற்காக அலகாபாத் உயர்நீதி மன்றத்தால் அமைக்கப்பட்டஎஸ்.கே. தர் கமிஷனும், காங்கிரசின் ஜெ.வி.பி. கமிட்டியும் (நேரு, படேல்,பட்டாபி சீதாராமைய்யா) மொழி வழிப் பிரிவினைக்கு உடன்படவில்லை.

* ஆனால் தெலுங்கு மொழி பேசுபவர்களுக்காக ஒரு தனி மாநிலம் உருவாக்கியேஆகவேண்டும் என்னும் கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலுஎனும் தெலுங்கர் மரண மடைந்ததையடுத்து 1953, அக்டோபர் ஒன்றாம் தேதிஆந்திரப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. (தெலுங்கானாப் பகுதிகளும்சேர்க்கப்பட்ட புதிய ஆந்திரப்பிரதேசம் 1956, நவம்பர் ஒன்றாம் தேதிஉருவானது)

ஆந்திரப்பிரதேசமே இந்தியாவில் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம்

* இதையடுத்து மேலும் பல மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்என்னும் கோரிக்கை வலுத்தபோது 1953-இல் ஸயீத் ஹஸன் அலி தலைமையில் ஒருகமிஷன் நியமிக்கப்பட்டது.

* 1956, செப்டம்பர் 30-இல் கமிஷன் தனது அறிக் கையை தாக்கல் செய்தது.இந்தியா 16 மாநிலங்கள் மற்றும் மூன்று ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்படவேண்டும் என அது பரிந்துரைத்தது. இதன் பெரும்பகுதியை ஏற்றுக்கொண்ட மத்தியஅரசு 15 மாநிலங்கள், ஏழு மத்திய ஆட்சிப் பகுதிகள் அமைய ஒத்துக் கொண்டது.

* இறுதியாக 1956 நவம்பர் ஒன்றாம் தேதி, மாநில மறு சீரமைப்பு சட்டத்தை(1956) நிறைவேற்றிய பாராளுமன்றம் 14 மாநிலங்கள், ஆறு மத்திய ஆட்சிப்பகுதிகளை உருவாக்கியது.

பல்வேறு மாநிலங்கள்

* மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்கள்ஏற்படுத்தப்பட்ட ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மாநிலப் பாகுபாட்டில் பல்வேறுமாற்றங்கள் நிகழ்ந்தன.

* 1957 - அசாமின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு சர்ழ்ற்ட் ஊஹள்ற் எழ்ர்ய்ற்ண்ங்ழ் ஆஞ்ங்ய்ஸ்ரீஹ் என மாற்றம் செய்யப் பட்டது.

* 1961, மே-1 - பம்பாய் மாகாணம் குஜராத், மகா ராஷ்டிரம் என இரண்டாக பிரிக்கப் பட்டது.

* 1961 டிசம்பர் 16- போர்த்துக்கீசிய காலனிகளான கோவா, டாமன், டையூ அன்னியசக்திகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு மத்திய ஆட்சிப்பகுதிகளாக இந்தியன்யூனியனில் இணைக்கப்பட்டன.

* 1963 டிசம்பர் 1 - நாகா மலைப்பகுதி "நாகாலாந்து' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு (1961) தனி மாநிலமானது.

* 1966 நவம்பர் 1 - பஞ்சாப் மாகாணம் பஞ்சாப் மற்றும் ஹரியானா என்னும் இரண்டு மாநிலங் களாகப் பிரிக்கப்பட்டன.

* 1971 ஜனவரி 2 - பஞ்சாப் மாநிலத்தின் சில மலைப் பகுதிகள் இமாசலப் பிரதேசத்திற்குள் உட்படுத்தப் பட்டு அது தனி மாநிலமாக்கப்பட்டது.

* 1972 - மணிப்பூர் ஒரு முழு மாநிலமானது.

* 1972 ஜனவரி 21 - அசாம் மாநிலத்திற்குள்ளேயே ஒரு தன்னாட்சி மாநில அந்தஸ்துடன் மேகாலயா மாநிலம் அமைக்கப்பட்டது.

* 1972 - திரிபுரா தனி மாநிலமானது. இது முதலில் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டு (1947)

* பிற்பாடு 1956-இல் மத்திய அரசு நிர்வாகப் பகுதியானது.

* 1973-இல் மைசூர் மாகாணம், கர்நாடகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது (1956-இல் உருவாக்கப் பட்டது)

* 1974 - இந்தியாவின் ஒரு பகுதியான (டழ்ர்ற்ங்ஸ்ரீற்ர்ழ்ஹற்ங்) சிக்கிம்பிற்பாடு இந்தியாவின் ஒரு கூட்டமைப்பு மாநிலமானது. 1975 ஏப்ரல் 14 அவசரக்சட்டத்தை யடுத்து இது இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளப்பட்டது.

* 1987 பிப்ரவரி 20 - சஊஎஆலி க்கு அருணாசலப் பிரதேசம் எனும் புதிய பெயர் சூட்டப்பட்டு தனி மாநிலமானது.

* 1987 பிப்ரவரி 20 - மிசோரம் தனி மாநிலமானது (இது 1972 வரை அசாமின் ஒரு மாவட்டமாக இருந்தது)

* 1987, மே 30 - கோவா தனி மாநிலமானது. (இது 1961-இல்போர்த்துக்கீசியரிடமிருந்து விடுவிக்கப் பட்டது). அதே வேளையில் டாமனும்,டையூவூம் மத்திய ஆட்சிப் பகுதியாகவே தொடர்ந்தன.

* 1991 - தில்லி தேசிய தலைநகரப் பகுதியானது.

* 2000 நவம்பர் 1 - மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது (இந்தியாவின் 26-வது மாநிலம்)

2000 நவம்பர் 4 - உத்திரப்பிரதேசத்தின் மலைப் பகுதிகள் அடங்கியஉத்தராஞ்சல் மாநிலம் உரு வாக்கப்பட்டது. (இந்தியாவின் 27-வது மாநிலம்)

* 2000 நவம்பர் 15 - பீகார் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. (இந்தியாவின் 28-வது மாநிலம்)

எதிர்காலத்தில் மாநிலங்களின் பிரச்சினை

உலகின் மூன்றில் இரண்டு பாகமாக தண்ணீராக இருக்கின்றது. ஆனால் 96.5சதவீதமான தண்ணீர் உப்புநீராக மனிதனுக்கு பயன்படாதவாறு உள்ளது. மீதி 3.5சதவீதத்தில் கூட 1.8 சதவீதமான தண்ணீர் மனி தனுக்கு பயன்படாதவாறுஐஸ்கட்டியாக உறைந்து போயுள்ளது. ஆகவே 1.7 சதவீதமான தண்ணீரே மனித னால்பயன்படுத்தப்படக் கூடிய நிலையில் இருக்கின்றது. அதிகரித்து வரும்மக்கள்தொகையின் எண்ணிக்கை யால் நீரின் தேவையும் அதிகரித்து வருகின்றது.சில நாடுகளின் நீரின் விலை எண்ணெயின் விலையை தாண்டிப் போய்விட்டது. நீர்ப்பற்றாக்குறையால் ஆண்டு தோறும் 2 மில்லியன் மக்கள் உலகில் இறக்கின்றார்கள்என்பது இதில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. இன்றைக்கு எண்ணெய்க்காக நடக்கும்யுத்தங்கள் போன்று வரும் காலத்தில் நீருக்காக யுத்தங்கள் நடக்கும் என்றுபல நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. மனிதனால் நீர் இல்லாமல் உயிர் வாழமுடியாது. நீர் பற்றாக்குறை என்பது மனிதனை எந்தச்செயலையும் செய்யத்தூண்டும். மற்ற எல்லா நாடுகளையும்விட இந்தியாவில் மக்கள்தொகை வேகமாகஅதிகரித்துக் கொண்டு வருகின்றது. 2050-இல் 200 கோடியை இந்திய மக்கள்தொகைதாண்டிவிடும் என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள குடிநீரில் 4 சதவீதமானகுடிநீர் இந்தியா வில் இருக்கின்றது என்பது இதில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு சாதகமான செய்தி. ஆனால் இந்த நீர் சில குறிப்பிட்டமாநிலங்களிலேயே இருக்கின்றது என்பதும், பல மாநிலங்கள் பெரும் நீர்ப்பற்றாக்குறையில் திணறிக் கொண்டிருப்பதும் இதில் பாதகமான செய்தி.

2050-இல் 200 கோடியை இந்திய மக்கள் தொகை தாண்டுகின்ற பொழுது நீர் வளம்உள்ள மாநிலங்களே நீருக்காக திண்டாட வேண்டி வரும். இவற்றைவிட நீர் வளம்பொருந்திய மாநிலங்களில் பன்னாட்டு நிறு வனங்கள் தமது தொழிற்சாலைகளைஅமைத்து நீரைச் சுரண்டத் தொடங்கியிருக்கின்றன. மக்கள்தொகையும் பெருகி,இருக்கின்ற நீர் வளத்தையும் பன்னாட்டு நிறு வனங்கள் சுரண்டிவிட, மற்றையமாநிலங்களோடு தற் பொழுது பகிர்ந்து கொள்கின்ற சிறிய அளவிலான நீரைக்கூடகொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநில அரசு அயல் மாநிலங்களுடன் செய்துகொண்ட நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தது. அரியானா,ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இதனால் பாதிக்கப் பட்டன. எத்தனையோ நடுவர்மன்றங்கள் அமைத்தும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரைக் கொடுக்கமறுக்கின்றது. ஆந்திராவிற்கும் கர்நாடகத்திற்கும் நதிநீர் பிரச்சினைஇருக்கின்றது. இப்படி ஒவ்வொரு மாநிலங் களுக்கும் இடையில் இந்தநீர்ப்பிரச்சினை இருக் கின்றது. இந்த நீர்ப் பிரச்சினை இந்தியத் தேசியஉணர்வை இல்லாமல் செய்கின்றன. மாநில தேசிய உணர்வுகள் மேலோங்குகின்றன.மற்றைய மாநிலத்த வர்கள் தமது மாநிலங்களில் குடியேறி தமது வளங் களைசுரண்டுவதாகக் கூட சில இடங்களில் குரல்கள் ஒலிக்கின்றன. மும்பையாகஇருக்கட்டும், கர்நாடகமாக இருக்கட்டும், மாநில நலனுக்காக ஒலிக்கின்ற குரல்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கின்றது.

நீர்ப் பற்றாக்குறை விரைவில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்றுதெரிந்தும் இந்திய அரசு அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கிய தாகதெரியவில்லை. மழை நீரை சேகரிக்கின்ற, நதி நீர் கடலில் கலக்காமல்தடுக்கின்ற, கடல்நீரை குடிநீராக மாற்றுகின்ற என்று எந்த ஒரு ஏற்பாட்டிலும்இந்திய அரசு தீவிரமாக இறங்கியதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.மாநில அரசுகளும் இதைப்பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை. தொலைநோக்கு சிந்தனையோடு நீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நேரத்தையும் நிதியையும் ஒதுக்குவதைவிட்டுவிட்டு, இந்திய அரசு சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது.1950-களில் மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்காவும். சோவியத் யூனியனும்நிலவுக்கு ராக்கெட் அனுப்பி விளை யாட்டுக் காட்டியதை, ஏறக்குறைய 40ஆண்டுகள் கழித்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செல வழித்து இந்திய அரசுசெய்கிறது. இந்தியாவும் நிலவுக்கு ராக்கெட் அனுப்பியது என்கின்ற ஒருபெருமையை தவிர, இதில் அப்படி என்ன வரப்போகிறது என்று யாருக்கும் சரியாகத்தெரியவில்லை. இந்தப் பெருமை இந்திய தேசிய உணர்வை தற்காலிகமாக கட்டிக்காக்கும் என்று இந்திய அரசு கணக்குப் போடக்கூடும்.

சச்சின் டெண்டுல்கரும், நிலவில் இந்திய ராக் கெட்டும் தண்ணீர்பிரச்சினையின் முன்பு எதுவுமே இல்லாமல் போய்விடும். தண்ணீர் பிரச்சினையில்போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், கடைசியில் இந்தியா பல நாடுகளாகஉடைந்து போவதை தடுக்க முடியாது. இப்படி இந்தியா உடைவதற்கான காரணிகள்இந்தியாவிற்கு உள்ளேயே இருக்கின்றன. அதற்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டுவேறு இடங்களில் இந்திய அரசு காரணத்தை தேடுகிறது. பொய்யான கற்பிதங் களைசெய்கிறது. கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில் மாநிலக்கட்சிகள் மேலும் பலம் பெற்று, மாநில உணர்வுகள் இன்னும் மேலோங்கி தண்ணீர்பிரச்சினையும் பூதாகரமாக மாறி இருக்கின்ற நிலையில், ""இந்தியாவோடு இருந்தகாரணத்தால் எங்களால் தமிழீழ மக்களுக்கு உதவ முடியவில் லையே'' என்றவேதனையான உணர்வும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்குமாயின், அது இந்தியாஉடைவதை மேலும் துரிதப்படுத்துமே தவிர, குறைக்காது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 62 வருடங்களாகியும் வடகிழக்கு மாநில மக்களின்பொருளாதார நலன்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதனாலேயே அங்கு தனிநாடுகளுக்கான போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவர்களின் நோக்கங்கள் தவறாகஇருப்பினும் மத்திய அரசின் தவறான போக்கின் பின்விளைவுகளே காரணம்.அதேபோலதான் காஷ்மீர் மாநிலமும். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. அப்போது அந்த மாநிலத்தின் கோரிக்கையேமாநில சுயாட்சிதான். அதனை அன்று ஏற்றுக் கொண்ட மத்திய அரசு படிப்படியாகமாநில சுயாட்சிக்கு விரோதமாக நடக்கவே, காஷ்மீர் மக்கள் போராட்டங்கள்நடத்தி வருகின்றனர். இந்தியை தமிழகத்தில் திணித்ததனாலும், மாநிலங்களின்நலன்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணித்து வந்ததனாலும்தான்அன்றைக்கு அறிஞர் அண்ணா தமிழகத்தில் தனிநாடு கோரிக்கையை எழுப்பினார். அதனைமாற்றி தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மாநில சுயாட்சியை வலியுறுத்திவருகிறார் .
Ref:Nakkeeran

No comments:

Post a Comment