Sunday, June 24, 2012

திராவிடக் கட்சிகளால்தான் வீழ்ந்தோம்???

  ""திராவிடக் கட்சிகளால்தான் வீழ்ந்தோம். எனவே இனி திராவிடக் கட்சிகளோடு எப்போதும் கூட்டணியே இல்லை''’என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேடைதோறும் பேசிக் கொண் டிருக்கிறார். அதேபோல் நாம் தமிழர் இயக்க சீமானும் தனது கட்சிக்கான கொள்கை ஆவணத்தில் பல இடங்களில் திராவிட இயக் கத்தை குற்றம் சுமத்தி இருக்கிறார். இது திராவிடர் கழகத்தினரை ரொம்பவே கொதிப்படைய வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ’தந்தை பெரியாரும் திராவிட இயக்கங்களும் தமிழகத் திற்கு செய்தவைகளை பட்டிமன்றங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள்’ என திரா விடர் கழகத் தலைவர் வீரமணி,  இயக்கத்தின ருக்கு வேண்டுகோள் விடுக்க... திருச்சி திராவிடர் கழகத்தினர் முதல் பட்டிமன்றத்தை பரபரப்பாக நடத்தினர்.

முனைவர் துரை.சந்திரசேகர் :  நடுவர் அவர்களே, நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. சென்னையில் ஒருகாலத்தில் ரொம்பவும் புகழ்பெற்ற சினிமா கொட்டகையான ஒத்தவாடை கொட்டகையில், அபிதான சுந்தரின்னு ஒரு நாடகம் நடந்தது.  அதற்கான விளம்பர நோட்டீஸில், சூத்திரர்களுக்கும் தொழுநோயாளிகளுக்கும் அனுமதியில்லைன்னு பிரசுரம் பண்ணியிருந் தானுங்க. இதைப்பார்த்து தந்தை பெரியார், யாரையடா இழிவுபடுத்தறீங்கன்னு கொதிச்சுப் போய்ட்டார். மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, எல்லோரும் நாடகம் பார்க்கலாம்ங்கிற நிலைமையை ஏற்படுத்தினார். தந்தை பெரியார் அப்படி போராடலைன்னா, இன்னைக்கும் சீமான் மாதிரியான ஆளுங்க தியேட்டருக்குப் போய் சினிமா கூட பார்த்திருக்க முடியாது. சுதந்திரத்துக்கு முன்னாடி நீடாமங்கலத்தில் காங்கிரஸ் மாநாட்டில் உயர் ஜாதிக்காரர்களோடு சாப்பிட உட்கார்ந்ததற்காக தாழ்த்தப்பட்டவர்களை கட்டிவைத்து மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தினார்கள் சனாதனவாதிகள். அப்போ அவங்களுக்காக சிங்கம்போல் கிளர்ந்தெழுந்து சனாதனவாதிகளை கண்டித்ததோடு பாதிக்கப்பப்படவர்களை நேரில் சந்தித்து ஒத்தடம் கொடுத்தவர் தந்தை பெரியார். இதையெல்லாம் தெரிந்துகொள்ளாத ராமதாஸ் போன்றோரை அறியாமை கொண்டோரின் பட்டியலிலேதான் சேர்க்க வேண்டும்.

அதிரடி அன்பழகன் : நடுவரே அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க. ஆரியர்கள் நம்மை வீழ்த்தணும்னு அனைத்து சாம பேத தண்ட உத்திகளையும் கையாண்டாங்க.. ஆனா அவங்களால் நம்மை வீழ்த்த முடியலை. காரணம் பெரியார் என்ற அரண் நமக்கு பாதுகாப்பாக நின்றது. அதனால் ஆரியர்கள் தங்கள் காலை நக்கக்கூடியவர்களை பொறுக்கி எடுத்து அவர்களை நமக்கு எதிராக களமிறக்கிக்கொண்டிருக்கிறார்கள். "சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள், சிந்திக்க மறுக்கிறவன் அயோக்கியன்' என்று பெரியார் சொல்வார். இவர்கள் அயோக்கியர்கள். தமிழ்பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் என்றால் இங்குள்ள ஆரியர்கள் கூட தமிழ்பேசுகிறவர்கள்தானே. அதனால்தான் மொழி அடிப்படையில் நாம் பார்க்காமல் இன அடிப்படையில் நாம் நம்மைப் பார்க்கிறோம். அதனால்தான் நாம் திராவிடர்களாக நம்மை பறைசாற்றிக் கொள்கிறோம். இதெல்லாம் தெரிந்தும் நமக்கு எதிராகவே பேசிவருபவர்கள் கண்டிப்பாக அகம்பாவம் பிடித்தவர்கள்தான்.


பெரியார் செல்வம் : ராமதாசும் சாமான்யனாக இருந்து சீமானாகியிருப் பவரும் அறியாமை என்ற நிலையையும் கடந்து மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போலாகிவிட்டார் கள். கம்யூனிஸ்ட் உடையாமல் ஒரே கம்யூனிஸ்ட்டாக இருந்தபோது தலைவராக இருந்தவர் டாங்கே. அவர் தமிழகம் வந்தபோது ஒரு சுயமரியாதைத் திருமணத்தைப் பார்த்துவிட்டு, இப்படி ஒரு அமைதிப் புரட்சியை இங்கே நடத்தியிருக்கும் பெரியார்தான் உண்மையான சீர்திருத்தவாதி என்று பாராட்டினார். உண்மையான தமிழ்ப்புத்தாண்டு தை முதல்நாள் என்பதை மாற்றிவிட்டு ஆரிய வழக்கப்படி சித்திரை 1 தான் தமிழ்ப்புத்தாண்டு என்று ஆரியம் அறிவித்தபோது, இந்த தமிழ் உணர்வாளர்கள் எங்கே போனார்கள். தெரிந்தே அந்த ஆரியத்தின் அதிகார மையத்தைப் பாராட்டும் இவர்கள் அகம்பாவம் பிடித்தவர்கள்தான்.

பூவை.புலிகேசி : படித்த பாமரன் படிக்காத பாமரன் என்று ரெண்டு வகையாக பெரியார் பிரிப் பார். படிக்காத பாமரனை விட படித்த பாமரன் மோச மானவன். சென்னை மாநிலக் கல்லூரியில் பணி யாற்றிய தமிழ்ப் பேராசிரியர் நமச்சிவாய முதலியாருக்கு 80 ரூபா மட்டுமே சம்பளம். சமஸ்கிருதப் பேராசிரியரான குப்புசாமி ஐயருக்கு 300 ரூபாய் சம்பளம். தமிழ் என்ன இளக்காரமா? என்று போர்க் குரல் கொடுத்து சம்பள வேறுபாட்டைக் களைந்தவர் தந்தை பெரியார். இதையெல்லாம் தெரிந்தும் கூட பெரியாரால் என்ன நடந்தது? திராவிடத்தால்தான் வீழ்ந்தோம் என்று சொல்பவர்கள், நிச்சயமாக அகம்பாவம் கொண்டவர்கள்தான்.

தீர்ப்புரையில் நடுவர் அறிவுக்கரசு : பிராமணர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் நுழைய முடியும் என்பதை மாற்றி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்து சாதித்தது திராவிடர்களின் ஆட்சிதான். முன்பெல்லாம் பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று ஓட்டலில் அவர்களுக்கு ஸ்பெஷலாக இடம் ஒதுக்குவார்கள். அந்த இழிநிலையைத் துடைத்தெறிந்த கைகள் திராவிட இயக்கத்தினரின் கைகள். இதையெல்லாம் அறிந்தும் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் திராவிட இயக்கங்களோடு உறவு இல்லை என்றும் கூப்பாடு போடுபவர்கள் நிச்சயமாக அகம்பாவக்காரர்கள்தான்.

-இப்படி விறுவிறுப்பாக பட்டிமன்றம் நடந்த நிலையில் சிறப்புரை ஆற்றிய தி.க. தலைவர் வீரமணி, ""திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று அறியாமையால் சொல்பவர்களைக் கூட விட்டுவிடலாம். ஆனால் அகம்பாவத்தால் அப்படி சொல்பவர்களை நாம் கண்டித்தே ஆகவேண்டும். அவர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள்''’என தீர்ப்பிற்கு அழுத்தம் கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சேகர் இல்லத்  திருமணம் சாதி மற்றும் மத மறுப்புத் திருமணமாக எளிமையாக நடந்தது.

அரசியல் நிகழ்வுகளை விவாதிக்கும் இது போன்ற பட்டிமன்றங்கள், மக்களை ரொம்பவே கவரத் தொடங்கியுள்ளன. 
Ref:Nakkeeran

No comments:

Post a Comment